எலிப்புழுக்கை ஏன் காய்கிறது?

(படத்தை கிளிக்கினால் பெரியதாக தெரியும்)


எலிப்புழுக்கை ஏன் காய்கிறது?


- இ.தலையாரி

அம்மா எனலாம் திருமாவை
அண்ட வூட்டுக்காரி எனலாம் சோனியாவை
அம்மாதான் பிள்ளைக்காக அழுகிறாள்
அண்ட வூட்டுக்காரி எதற்காக அழுகிறாள்!

குழந்தை எனலாம் திருமாவை
தவுக்களை எனலாம் சிதம்பரத்தை
குழந்தைதான் பாலுக்காகக் கத்துகிறது
தவுக்களை எதற்காக கத்துகிறதோ!

சேவல் எனலாம் திருமாவை
நரி எனலாம் சுதர்சனத்தை
சேவல்தான் விடியலுக்காக கூவுகிறது
நரி எதற்காகக் கூவுகிறதோ!

மழைமேகம் எனலாம் திருமாவை
நச்சுப்புகை எனலாம் ஞானசேகரனை
மேகம்தான் மழைக்காகத் திரள்கிறது
நச்சுப்புகை எதற்காக திரள்கிறதோ!

அவயக்கோழி எனலாம் திருமாவை
பருந்து எனலாம் பிரணாப்முகர்ஜியை
அவயக்கோழிதான் குஞ்சு பொரிக்கக் காக்கிறது
பருந்து எதற்காக காக்கிறதோ!

நெற்பயிர் எனலாம் திருமாவை
களை எனலாம் இளங்கோவனை
நெற்பயிர்தான் உலகுக்காக வளர்கிறது
களை எதற்காக வளர்கிறதோ!

அரிசி எனலாம் திருமாவை
கல் எனலாம் தங்கபாலுவை
அரிசிதான் சோறாகக் கொதிக்கிறது
கல் எதற்காகக் கொதிக்கிறதோ!

எள் எனலாம் திருமாவை
எலிப்புழுக்கை எனலாம் ஜெயலலிதாவை
எள்தான் எண்ணைக்குக் காய்கிறது
எலிப்புழுக்கை எதற்காகக் காய்கிறதோ!

***

1 comments:

onnum puriyala paa

20 மார்ச், 2009 அன்று 7:22 PM comment-delete

கருத்துரையிடுக