சண்டையை நிறுத்தச் செய்தால்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்! - திருமா

சண்டையை நிறுத்தச் செய்தால்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்! அதற்கு ஆவன செய்யவேண்டும்

முதல் அமைச்சரை சந்தித்து தொல். திருமாவளவன் கி. வீரமணி, மருத்துவர் ச. ராமதாசு, கடிதம்

ண்டையை நிறுத்தச் செய்தால்தான் அமைதி பேச்சு வார்த்தை தொடர முடியும். அதற்கு ஆவன செய்யவேண்டு மென்று விடு தலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் , திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு, ஆகியோர் தமிழக முதல் அமைச்சர் அவர்களிடம் அளித்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

12.01.2009 காலை 9.30 மணி யளவில் இம்மூன்று தலைவர்களும் முதலமைச்சரை சந்தித்து அளித்த கடிதத்தில் குறிப் பிட்டிருப்பதாவது:

மாண்புமிகு முதல்வர் அவர் களின் கனிவான பார்வைக்கு...

அன்பு வணக்கம்.

லங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தை நடை பெறுவதற்கு அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு ஆதரவாகச் செயல்படும் என்று 2004-ஆம் ஆண்டில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசு, தி.மு.க. பா.ம.க. உள்ளிட்ட 15 கட்சிகளின் தலை வர்கள் கையெழுத்திட்ட குறைந்த பட்ச செயல்திட்டத் தில் இந்த வாக்குறுதி இடம் பெற்றிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டுமானால், அங்கே உடனடியாகச் சண்டை நிறுத்தப்பட வேண்டும். சண்டை நிறுத்தம் வந்தால்தான் அமை திப் பேச்சுவார்த்தை நடைபெற முடியும். ஆனால், இன்றைக்குப் போர்க்களத்தில் நின்று கொண் டிருக்கிற போராளிகளை முழு வதுமாக அழித்துவிட்டு அல் லது அவர்களை முற்றிலுமாக வெற்றிகண்டுவிட்டு, அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை என்ற வெறியுடன் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. சண்டையை நிறுத்தி விட்டுப் பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வலி யுறுத்தியிருக்கின்றன. சண்டை யினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும், பிரச் சினை தீராது என்றும் நேற்று போப்பாண்டவர் கூட அறி வித்திருக்கிறார். இந்தியாவும் சண்டையினால் தீர்வு காண முடியாது என்று பேச்சளவில் சொன்னாலும் சண்டையை நிறுத்துங்கள் என்று இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வில்லை.

இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற சந்தேகம்

சண்டை நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் கள் கொல்லப்படுவது நிறுத் தப்பட வேண்டும் என்று தமிழ கமே ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கி றது. ஆனால், தமிழகத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்று சண்டையை நிறுத்தும்படி இந்திய அரசு இதுவரை கூற வில்லை. இதிலிருந்து இலங்கை யில் சண்டையை நடத்திக் கொண்டிருப்பது இலங்கை போர்ப்படையினர் என்றா லும், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்ற சந் தேகம் வலுப்படுகிறது. இத் தகைய சந்தேகம் முதலமைச் சராகிய உங்களுக்கும் எழுந் திருக்கும் என்பதில் எந்த சந் தேகமும் இல்லை. இந்த சந் தேகத்தைப் போக்க வேண்டி யது இந்திய அரசின் கடமை யாகும். அதற்காவது சண் டையை நிறுத்துங்கள் என்று கடைசி நேரத்திலாவது இந்திய அரசு குரல் கொடுக்கவேண்டும்.

அங்கே சண்டை நீடித்து ஒருவேளை இலங்கை அதிபர் சாதிக்க விரும்புகிறபடி வடக்கு மாகாணத்தையும் கைப்பற்று வதால், அதனால் இந்தியா சாதிக்கப் போவது என்ன? தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காமல் அலட்சியப்படுத்தி விட்டு இலங்கை அரசு விரும்பு கிறபடி சண்டையில் அவர்கள் வெற்றி பெறுவதால் இந்தி யாவிற்குக் கிடைக்கப் போவது என்ன? இந்தியா சாதிக்கப் போவது என்ன? இதனை மத்திய அரசு தான் தெளிவு படுத்த வேண்டும். அதை விட தமிழகம் விரும்புகின்றபடி இந் தியா எச்சரிக்கை செய்து அங்கே சண்டை நிறுத்தப்பட்டால் இங்குள்ள தமிழர்களின் ஆத ரவு மட்டுமின்றி உலகத் தமி ழர்கள் ஆதரவும் இந்திய அர சுக்குக் கிடைக்கும் என்பதை வலியுறுத்திக் கூறவேண்டும்.

இந்தியாவே முன்னின்று பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்

சண்டை நின்றால்தான் குறைந்தபட்சச் செயல் திட் டத்தில் நாம் அறிவித்துள்ள படி, நாம் விரும்புகின்றபடி இலங்கைத் தமிழர்களின் நியா யமான கோரிக்கைகள் நிறை வேற பேச்சுவார்த்தைகளைத் தொடங்கமுடியும். அப்படி பேச்சுவார்த்தைத் தொடங்கப் பட்டாலும் கடந்த காலங் களைப்போல பெரும் கண் துடைப்பாக இல்லாமல் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் காணும் வகையில் உளப்பூர்வமாக நடைபெற வேண்டும். ஈழத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், மொழி உள்ளிட்ட அனைத் துக் கோரிக்கைகளுக்கும் எத் தகைய தீர்வை வைத்திருக் கிறது என்பதை இந்தியா கோரி பெறவேண்டும். நார்வே போன்ற நாடுகள் வரட்டும் என்று காத் திருக்காமல் இந்தியாவே முன் னின்று அமைதிப் பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும். இதனை மத்திய அரசுக்கு நாம் மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூற வேண்டும். அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் திரு. ஆர்க்காடு நா. வீராசாமி, பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு. ஜி.கே. மணி ஆகியோர் உடனிருந்தனர்.

2 comments:

எமக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் உங்களுக்கு என் நன்றியை தெரிவிதுக்கொள்கிறேன்.

13 ஜனவரி, 2009 அன்று 3:02 AM comment-delete

அற்புதன் said...
அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்

தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை
ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.

நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.
நன்றி.



SLA shelling targets densely populated Vanni regions
Uploaded by spyglass8
மேலதிக தகவல்களுக்கு
முரசுமோட்டை மக்கள் குடியிருப்பில் சிறிலங்கா வான் படை தாக்குதல் 31.12.2008 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=91
முரசுமோட்டை-வெளிக்கண்டல் சிறிலங்கா வான் படை தாக்குதல் 01.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=92
முரசுமோட்டை ஏறிகனைத்தாக்குதல் 02.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=93
வட்டக்கச்சி,தருமபுரம் பகுதிகளில் எறிகணைத்தாக்குதல் 08.01.2009 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=102
முல்லைத்தீவு தேரா மேற்குப்பகுதி ஏறிகனைத்தாக்குதல் 11.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=103

Posted by அற்புதன் at 09:56 0 comments
http://aatputhan.blogspot.com/

13 ஜனவரி, 2009 அன்று 8:11 PM comment-delete

கருத்துரையிடுக