மறைமலை நகரில் சாகும் வரை உண்ணாவிரதத்தை - தொடங்கினர் திருமா


தமிழீழ சொந்தங்கள் மடிவதையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள போரை நிறுத்த இந்தியா அரசு முன் வரவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் விடுதலை சிறுத்தைகள் தலைவர்,எழுச்சி தமிழர் தொல் திருமா அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவிப்பு செய்துள்ளார் ..


ஏற்கனவே ஈழ பிரச்சனையில் இந்தியா அரசு தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் மூன்று கட்ட போராட்டமாக ,உண்ணாவிரத போராட்டம் ,தொடர் முழக்க போராட்டம் மற்றும் மாபெரும் பேரணியும் நடத்தினர்கள் ..சிறுத்தைகளின் ரயில் மறியல் போராட்டம் இந்தியா அரசை அதிர செய்தது ..


இத்தனை போராட்டங்களுக்கு பின்னும் செவிடனாய் தமிழக மக்களின் குரலுக்கு செவி சாய்க்காத இந்தியா அரசின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் விதமாக திருமா அவர்களின் இந்த அறிவிப்பு உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்..இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் சார்பாக அழைப்புவிடுத்துள்ளனர்

சென்னை மறைமலை நகரில் 
வியாழன் கிழமை (15-01-2009) திருமாவளவன் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கினார் 

"அழிவின் விளிம்பில் ஐந்து லட்சம் தமிழர்கள். இனவெறிப் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்து." என்ற கோரிக்கையை முன்வைத்து தொல். திருமாவளவன் சாகும்வரை உண்ணாநிலை இருப்பதால் தமிழகம் எங்கும் மீண்டும் பரபரப்பாக இருக்கின்றது.

2 comments:

kindy watch the video in tis link show to momohan
http://melbkamal.blogspot.com/2009/01/blog-post_5556.htmlhttp://melbkamal.blogspot.com/2009/01/blog-post_5556.html

14 ஜனவரி, 2009 அன்று 2:04 PM comment-delete

gread tirma valavan is gread

14 ஜனவரி, 2009 அன்று 2:05 PM comment-delete

கருத்துரையிடுக