மதுரையில் அரைநிர்வாண போராட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை  தீவிரப்படுத்தவும், தமிழகத்தில் திட்டமிட்டு சாதிக் கலவரங்களை தூண்டும்   சாதிய இயக்கங்கள் ,சாதிகட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்   தருமபுரி நாமக்கல், கடலூர், விழுப்புரம்  உள்ளிட்ட தமிழகத்தில் தலைவிரித்தாடும்  சாதிவெறியாட்டதை கண்டித்தும், மருத்துவர் ராமதாசின் ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அரை நிர்வாண ஊர்வலமும் மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்பாட்டத்தில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாத்துரை,  சி.பி.ஐ மாவட்ட  செயலாளர் ஜெயராமன்,  ஆதிதமிழர் பேரவையின் மாநில நிதிச்செயலாளர்  நீலவேந்தன்,    தமிழ்  புலிகள் மெய்யப்பன் ஆகியோர்  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஏ .சி பாவரசு,  , அ.செல்லப்பாண்டியன் ,முத்தமிழ்பாண்டியன். வழக்கறிஞர் இன்குலாப், பெரியார்வேந்தன், ஓவியர் முதல்வன் முத்துபாண்டி, மணியரசு ,போஸ்,அயங்காளை தமிழ்நிலவன்  , அதிவீரபாண்டியன் ,  கலைவாணன், தென்னவன்,கார்வண்ணன் மாதவன்  பூமிநாதன், பூபாலன்,  ,பூமிநாதன், கு.காமராசு, சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வே.கனியமுதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் இரா.பாண்டியம்மாள்  மோ.எல்லாளன் தலைமை வகித்தனர்




















--- ஓவியர். நா.அழகர்சாமி

0 comments:

கருத்துரையிடுக