காவிரி நதிநீர் உரிமைப் காப்பு ஊர்திப் பயணம்





கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரியும், தொடர் மின்வெட்டைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (அக்டோபர் 4-ம் தேதி, வியாழக்கிழமை,) சிதம்பரத்திலிருந்து திருச்சி வரையிலான காவிரி நதிநீர் உரிமைப் காப்பு ஊர்திப் பயணம், தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் புறப்பட்டது.
சிதம்பரம் அனந்தீஸ்வரன்கோயில் தெருவிலிருந்து ஊர்திப் பயணத்தை திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
கே.எஸ்.அழகிரி எம்பி, கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்திப் பயணத்தில் பங்கேற்க கடலூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த புவனகிரி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் மற்றும் தமிழக முழுக்கமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன்  காவிரி நதிநீர் உரிமைப் காப்பு ஊர்திப் பயணம் புறப்பட்டு சென்று கொண்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக