திமுக சின்னத்தில் போட்டியிடபோவதில்லை: திருமா

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வேளச்சேரி தாய்மண் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


* பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும்.


* விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்யும் முழு அதிகாரம் தலைவருக்கு வழங்கப்படுகிறது.


* அம்பேத்காரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ந் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் விருதுகள் வழங்கும் விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கான விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளரும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

*****

2 comments:

திமுக சின்னத்திலேயே போட்டியிடுவதுதான் நல்லது

2 ஏப்ரல், 2009 அன்று 11:55 AM comment-delete

To Thiruma,
i m srithar from mumbai.
i have a great opinion about u.
but why u join with congress aligns.
u r one of the leaders like (seema).v r the followers..
take a good action. v r waiting.
srithar (VIZHITHEZHU IYAKKAM,MUMBAI)
09987379815

3 ஏப்ரல், 2009 அன்று 6:50 PM comment-delete

கருத்துரையிடுக