இடுக்கியில் விடுதலை சிறுத்தைகள் போட்டி -திருமாவளவன்





வருகிற ஏப்ரல் 14 கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இடுக்கி நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக வாசுதேவன் /பெ ரங்கசுவாமி அவர்கள் போட்டியிடுகிறார்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறியாளர் அணி மாநில நிதி செயலாளரான இவர் பொறியியலில் இளங்கலை (B.E) முடித்துள்ளார்.39 வயதான தொழில் முனைவோரான இவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இடுக்கி நாடாளுமன்றத்தில் தேர்தல் பணியாற்ற பின்வரும் பணிக்குழு நியமிக்கபடுகின்றது:

தொகுதி மேற்பார்வையாளர் : இளஞ்சேகுவேரா

சட்டமன்ற வாரியான தொகுதி பொறுப்பாளர்கள்:

இசையரசு,து.ஜெயபால்,மா.செல்வராஜ்,நா.ராஜ்,சிவன்,மணிகண்டன்,வாகையரசு,
முல்லையரசு,துரைசிஸ்,ஜெயசீலன்,சேகர்,சரவணன்
ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் தொகுதிகளின் எண்ணிகையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கபட்டதாக கூறியுள்ளார்...


0 comments:

கருத்துரையிடுக