சமுக நல்லிணக்கம் - தமிழ் தேசிய எழுச்சி பாதுகாப்புக்கு விடுதலை சிறுத்தைகளுடன் பா.ம.க வரவேண்டும்!

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் விரும்புவதாக அதன் தலைவர் தோல்.திருமாவளவன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார் ....இருகட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார் ....

1 comments:

சமுக நல்லிணக்கத்திற்காகவும் தமிழ் தேசிய எழுச்சி பாதுகாப்புக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இரு இயக்கங்களும் செய்ய வேண்டிய வரலாற்று கடமையும் கூட.

தமிழின உரிமையை மீட்டெடுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள மற்ற இயக்கங்களை விட இந்த இரு இயக்கங்களுக்கே பொறுப்பும் அதிகம். காரணம் தமிழ்நாட்டில் தமிழர்களால் தமிழர்களுக்காக தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்த கட்சிகள் இந்த இருகட்சிகள் மட்டுமே...

இந்த இரு இயக்கங்களும் ஓரணியில் இருக்கக்கூடாது என்பதை தமிழரல்லாத தலைமையை கொண்ட அனைத்து அரசியல்கட்சிகளும் செயலாற்றுகின்றன.

இருப்பினும், பா.ம.க-வும் வி.சி-யும் இணைந்து முதலில் எதிரியை அழிக்கப்போகிறோமா? துரோகியை அழிக்கப்போகிறோமா? என்பதே இப்போதுள்ள கேள்வி!

கருணாநிதியை நம்பி இந்தத்தமிழினம் ஏமாந்தது போதாதா? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் கருணாநிதி என்ற தமிழினத் துரோகியை நம்பி இந்த தமிழினம் ஏமாறுவது?

இந்த இரு இயக்கங்களும் இணைந்து சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

24 மார்ச், 2009 அன்று 9:59 AM comment-delete

கருத்துரையிடுக