இன உணர்வாளர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க திருமா அழைப்பு

நான்காம் திகதி நடைபெறும் முழுவேலைநிறுத்தத்தில் அனைத்து கட்சிகளிலும் உள்ள மனிதநேயமுள்ளவர்களையும் பங்கேற்க திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நாளை மறுநாள் (4-ந் தேதி) பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டம் தமிழகத்தில் நடைபெறுவதால் தமிழக அரசுக்கு எதிரானது அல்ல.

அரசால் அல்லது ஆட்சியிலிருக்கிற தி.மு.க.வால் இத்தகைய போராட்டத்தை அறிவிக்க இயலாத காரணத் தினால் ஆட்சியில் இல்லாத கட்சிகள், கட்சி சாராத அமைப்புகள் தமிழக மக்களின் உணர்வுகளை ஒரு முகமாகக்குவிக்கும் வகை யில் ஜனநாயக அடிப்படையிலான பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கிற கட்சிகள் மட்டுமின்றி தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பொதுவுமைக் கட்சி ஆகிய கட்சிகளில் உள்ள மனித நேய உணர்வாளர்கள், இன உணர்வாளர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்று போராட் டத்தை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்க வேண்டுமென்று தோழமையோடு கேட்டுக் கொள்கி றோம்.

அரசு இத்தகைய போராட்டத்தை அறிவிக்கக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மற்றபடி பொது மக்கள் இத்தகைய போராட்டங்களை தன்னெழுச்சியாக நடத்துவது சட்ட விரோதமாகாது. ஆகவே ஒட்டு மொத்தத் தமிழகமும் கிளர்ந்தெழுந்து இந்திய- சிங்களக் கூட்டு சதியை முறியடிக்கும் வகையில் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டு மாறும் போராட்டத்தை அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் நடத்த ஒத்துழைக்க வேண்டுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

வருகிற 4-ந்தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதால் அதே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்துவதாக அறிவித்திருந்த சிங்கள தேசியக்கொடி எரிப்பு போராட்டம் தவிர்க்கப்படுகிறது. வேறு வடிவிலான போராட்டத்தை பிறிதொரு நாளில் நடத்துவதற்குரிய செயல்திட்டங்களை வரையறுத்து பின்னர் அறிவிக்கப்படும். ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான களப்பணிகளையும், பிப்ரவரி 7-ந்தேதி நடைபெறவுள்ள பகுதி வாரியான கறுப்புக்கொடி ஊர்வலங்களுக்கான ஏற்பாடுகளையும் முழு வீச்சில் ஆற்ற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

0 comments:

கருத்துரையிடுக