ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கை தொல்.திருமாவளவன் கருத்து
ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக் கை
தொல்.திருமாவளவன் கருத்து
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று தனது முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை இன்று தா க்கல் செய்துள்ளது. அதில் மக் களுக்கு நன்மைபயக்கும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என பரவ லான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா ல் அந்த எதிர்பார்ப்புக்கு மாறா க, ஏமாற்றமளிப்பதாக அந்த நிதி நி லை அறிக்கை அமைந்துள்ளது. அனை த்துத் தரப்பு விவசாயிகளுக்கும் அவர்கள் பெற்ற அனைத்து வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலராலு ம் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதற்கான அறிவிப்புகள் இட ம்பெறவில்லை.
மாணவர் கல்விக் கடன்களைத் தள்ளு படி செய்ய எந்த அறிவிப்பும் இல் லை. தமிழ்நாட்டில் சுமார் 1 கோ டி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலு வலகங்களில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அறிவிப்பு எது வும் இதில் இடம்பெறவில்லை. தமி ழ்நாட்டில் உள்ள குடிசை வீடுகளை யெல்லாம் மாற்றிவிட்டு கான்கிரீ ட் வீடுகளைக் கட்டித்தர வேண்டு ம், தமிழகத்தை குடிசையில்லாத மா நிலமாக மேம்படுத்த வேண்டும் என் று கோரி வந்தோம். அதைப்பற்றிய அறிவிப்புகள் எதுவும் இதில் இடம் பெறவில்லை.
பெண்களின் முன்னேற்றத்துக்கோ, தா ழ்த்தப்பட்ட பழங்குடியினரின் மு ன்னேற்றத்திற்கோ புதிய திட்டங் கள் ஒன்றுகூட அறிவிக்கப்படவில் லை.
தமிழ்நாட்டில் படிப்படியாக மது விலக்கை நடைமுறைப்படுத்துவோம் எ ன தேர்தலின்போது அதிமுக வாக்கு றுதி அளித்தது. கண்துடைப்பாக 500 கடைகள் மட்டும் மூடப்பட்டன. அடுத்தகட்டம் என்ன என்பதைப் ப ற்றியோ, படிப்படியாக மதுவிலக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போ கிறார்கள் என்பது பற்றியோ எந் தவித அறிவிப்பும் இதில் இடம்பெ றவில்லை.
2011ஆம் ஆண்டு பதவியேற்றபோது இதே அதிமுக அரசால் உறுதியளிக்கப் பட்ட எந்தவொரு திட்டம் குறித்து ம் இதில் ஒரு வார்த்தையும் குறி ப்பிடப்படவில்லை. புதிய மின் தி ட்டங்களை உருவாக்குவது பற்றியோ மோனோ ரயில் திட்டத்தைப் பற்றியோ , முதியோர் இல்லங்களைக் கட்டித் தருவது பற்றியோ ஒரு வார்த்தையு ம் குறிப்பிடப்படவில்லை.
5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடு கள் கட்டப்போவதாக இதில் தெரிவி க்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி யின்போது தமிழ்நாடு முழுவதும் உ ள்ள குடிசை வீடுகளைக் கணக்கெடு ப்பு செய்து 21 இலட்சம் வீடுகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றபோது கை விட்டுவிட்டார்கள். கடந்த 5 ஆண் டுகளில் குடிசைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விட்டது. என வே, மீண்டும் தமிழ்நாடு முழுவது ம் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.
குடிசையில்லாத தமிழகமாக இந்த மா நிலத்தை மாற்ற வேண்டும் என்று த மிழக அரசை வலியுறுத்துகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளப் பா திப்புக்கு ஆளாகி கடும் இழப்பு களைச் சந்தித்துவரும் திருவள்ளூ ர், சென்னை, காஞ்சிபுரம், விழு ப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிரந்தரமான வெள்ளத் தடுப்பு நடவ டிக்கைகளை எடுப்பதற்கு இந்த நி திநிலை அறிக்கையில் எந்த அறிவி ப்பும் செய்யப்படாதது அதிர்ச்சி யளிக்கிறது. கடந்த ஆண்டைப் போ லவே இந்த ஆண்டும் சென்னையில் கன மழை பெய்யும் என வல்லுநர்கள் எ ச்சரித்துள்ள நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மே ற்கொள்ளப்படாதது வேதனையளிக்கி றது.
ஆக மொத்தத்தில் இந்த நிதிநிலை அ றிக்கை தமிழக மக்களின் எதிர்பா ர்ப்புகள் எதையும் நிறைவு செய் யாத ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அ றிக்கையாக உள்ளது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக